Ads (728x90)





மேற்­கு­ல­கத்தின் ஆத­ர­வுடன் ஆட்­சியில் அமர்ந்­துள்ள நல்­லாட்சி அர­சாங்கம் மோச­டி­களைக் கண்­டு­பி­டிப்­ப­தாக கூறி மக்­களை ஏமாற்றி வரு­கின்­றது. கால­வோட்­டத்தில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் தொலைக்­காட்சி நாட­கம் ­போன்­ற­தா­கவே இருக்கும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் புதல்­வரும் அம்­பாந்­தோட்டை பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான நாமல் ராஜ­பக்ஷ தெரி­வித்தார்.


இந்த நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் பிரச்­சி­னை­கள் காணப்­ப­டு­கின்­றன என்­பதை ஏற்­றுக்­கொண்­ட அவர், மக்­க­ளி­டையே எவ்­வி­த­மான முரண்­பா­டு­களும் இல்லை அர­சி­யல்­வா­தி­க­ளி­டையே அர­சியல் ரீதி­யான பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு பிரச்­சி­னை­களை தீர்க்க வேண்­டு­மென்ற எண்­ண­மில்­லை­யென சுட்­டிக்­காட்­டி­ய அவர், மக்­க­ளுக்­காக இத­ய­சுத்­தி­யுடன் ஏதா­வது செய்­வ­தற்­கா­கவே விக்­கி­னேஸ்­வரன் புதிய அமைப்பை ஆரம்­பித்­துள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.


நாமல் ராஜ­பக்ஷ வழங்­கிய விசேட செவ்­வி­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,


கேள்வி:- நாட்டின் தலைமைப் பொறுப்பை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏற்று ஓராண்டு நிறை­வ­டைந்­துள்­ளது. புதிய ஆட்­சியை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?


பதில்:- புதிய ஜனா­தி­பதி, புதிய ஆட்சியில் நாட்டைப் பொறுப்­பேற்று ஆண்­டொன்று நிறை­வ­டைந்­துள்­ளது. எமது மோச­டி­களை தேடு­வ­தாக கூறிக்­கொண்டு உள்­நாடு, வெளிநா­டு­க­ளுக்கு சுற்­று­லாக்­க­ளையே மேற்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். சர்­வ­தேச வங்­கிக்­க­ணக்­குகள் இருக்­கின்­றன, நபர்­களை கொலை செய்­தி­ருக்­கின்­றார்கள், மோசடி செய்­தி­ருக்­கின்­றார்கள் என்­று­கூ­றிக்­கொண்டே இருக்­கின்­றார்கள். இது­வ­ரையில் எத­னையும் நிரூ­பிக்­க­வு­மில்லை. அவர்­க­ளுக்கு எதுவும் கிடைக்­க­வு­மில்லை. மறு­பக்­கத் தில் பொது­மக்­க­ளுக்­காக எத­னையும் செய்­ய­வு­மில்லை.


கேள்வி:- உங்கள் மீதும் உங்­க­ளு­டைய குடும்­பத்­தினர் மீதும் ஊழல்­மோ­சடி உட்­பட பல நிதி­மோ­சடிக் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ள­னவே?


பதில்:- ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட்­டது முதல் இவ்­வாறு கூறிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். தங்­கக்­கு­வியல், லம்­போ­ஹனி வாக­னங்கள் பங்­க­ளாக்கள், ஹெலி­கொப்­டர்கள்,விமா­னங்கள் போன்­றவை எம்­மிடம் இருப்­ப­தாக கூறி­னார்கள். எமது வீட்­டுக்கு வந்து தேடு­தல்­களை நடத்­தி­னார்கள். இன்றும் அவ்­வாறு கூறிக்­கொண்­டே­யி­ருக்­கின்­றார்கள். எத­னையும் கண்­ட­றி­ய­வில்­லையே.


முதலில் பசில் ராஜ­பக்ஷவை சிறை­யி­லிட்­டார்கள்.அதன் பின்னர் அப்­பாவின்(மஹிந்த ராஜ­பக் ஷ) பின் னால் வந்­தார்கள். அம்­மாவின் மீது குற்றம்சாட்­டி­னார்கள். கோத்த­பாய ராஜ­பக் ஷ மீதும் குற்றம்சாட்­டி­னார்கள். இறு­தியில் என்­மீதும் சகோ­த­ரர்கள் மீதும் குற்­றச்­சாட்டுக்களை முன்­வைத்­தார்கள். ஊழல்­மோ­சடி ஆணைக்­குழு உட்­பட பல தரப்­புக்­க­ளி­லி­ருந்து விசா­ர­ணைக்­காக கடி­தங்­களை அனுப்பி விசா­ர­ணை­களை மேற்­கொள்­கின்­றார்கள். இன்­று­வ­ரையில் எத­னையும் உறு­திப்­ப­டுத்­த­வில்லை. எம்மை குற்­ற­வா­ளி­க­ளாக அடை­யாளம் காண்­ப­தற்­கு­ரிய சாட்­சி­யங்கள் அவர்­க­ளி­டத்தில் இல்லை.


தேர்தல் காலத்தில் இவ்­வா­றான விட­யங்­களை முன்­வைத்து மக்­களை ஏமாற்­றி­யி­ருக்­கின்­றார்கள். எம்­மீது பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளையே சுமத்­தி­யி­ருக்­கின்­றார்கள் என்­பது நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.


அவ்­வாறு எம்மை விசா­ர­ணைக்­காக கொண்டு செல்­வதால் எந்­த­ப­யனும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. இவ்­வாறு விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­ப­டு­வ­தா­னது சிறந்­த­தொரு செயற்­பா­டாகும். ஈற்றில் பொது­மக்­க­ளுக்கு இவை அனைத்­துமே தொலைக்­காட்­சியில் பார்க்கும் நாட­கங்கள் போன்­றே­யி­ருக்கும். நாம் எந்­தத்­த­வறும் இழைக்­காத அப்­பா­விகள் என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டு­விடும்.


ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கோ, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கோ நித்­திரை வரா­மைக்­காக எம்மை சிறை­யி­ல­டைக்­கலாம். ஆனால் பொது­மக்­க­ளுக்கு வழங்­க­வேண்­டி­ய­வற்றை வழங்­குங்கள். அதற்­காக நாம் சிறைக்கு செல்­ல­வேண்­டு­மானால் அதற்கும் தயா­ராகவே இருக்­கின்றோம்.


அதே­நேரம் மறு­பக்­கத்தில் திரு­டர்கள், குடும்ப ஆட்­சி­யா­ளர்­க­ளென்ற பிர­சா­ரமும் மேற்­கொள்­ளப்­பட்டு ஏனை­யோரும் திசை­தி­ருப்­பப்­பட்­டார்கள். இந்த சதிக்குள் சிக்­குண்டு வாக்­க­ளித்­த­வர்கள் இன்று அதனை உணர்ந்­துள்­ளார்கள். குறிப்­பாக அளுத்­கம சம்­ப­வத்தின் பின்­ன­ணியில் இருந்து செயற்­பட்­டவர் தற்­போ­தைய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் அமைச்­ச­ர­வையில் உள்ளார். நான் பெய­ரைக்­கு­றிப்­பிட முன்­வ­ர­வில்லை.


அன்று இன­வா­தி­க­ளாக செயற்­பட்­ட­வர்கள் இன்று அமைச்­ச­ர­வையில் இருக்­கின்­றார்கள். மஹிந்த ராஜ­ப­க் ஷவின் ஆட்சிக் காலத்தில் தான் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு உரிய இடம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் பிரதி தலை­வ­ராக கருணா நிய­மிக்­கப்­பட்டார். இன்று தேசிய பட்­டி­யலில் அங்­கஜன் இரா­ம­நாதன் அர­சி­ய­லுக்கு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டார். வட­கி­ழக்கு அபி­வி­ருத்­திக்கு நிதி ஒதுக்கப்­பட்­டது. அபி­வி­ருத்தி திட்­டங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. தேர்­தல்கள் நடத்­தப்­பட்­டுள்­ளன.


கேள்வி:- யுத்­தத்தை முடி­வுக்கு ­கொண்டு வந்­தி­ருந்­த­போதும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வதில் மகிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் தோல்­ விய­டைந்து விட்­ட­மையை ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களா?


பதில்:- யுத்­தத்தை நிறை­வுக்கு கொண்­டு­வந்­தி­ருந்த மஹிந்த ராஜ­பக் ஷ நல்­லி­ணக்க செயற்­பா­டு­க­ளையும் அதி­க­ளவில் முன்­னெ­டுத்­தி­ருந்தார். தற்­போது அவை முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக கூறப்­பட்­டாலும் அவ்­வி­த­மான எந்த நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை.


பதில்:- ஆம், மக்­க­ளுக்கு உண்­ப­தற்கு உண­வில்­லாது நட்­பு­றவு கொள்­ளுங்கள் எனக் கூற­மு­டி­யாது. நல்­லி­ணக்­கத்தின் முதற்­ப­டி­யாக காணப்­ப­டு­வது உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி அவற்றை நாம் முறை­யாக முன்­னெ­டுத்தோம். யுத்­தத்தை நிறை­வுக்­கு­கொண்டு வந்த மஹிந்த ராஜ­பக் ஷ நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­து­வதற்­கான வழியை அமைத்தார். அது­மட்­டு­மன்றி யுத்த தள ­வா­டங்கள்இ நிலக்­கண்­ணி­வெ­டிகள் போன்­றவை அகற்­றப்­பட்­டன. தொலைத்­தொ­டர்பு வச­திகள் உட்­பட அனைத்தும் வழங்­கப்­பட்­டன. இதன் பின்­னரே நட்­பு­றவு கொள்­ள­மு­டியும். அனைத்­துமே உடைந்து நொறுங்­கிய நிலையில் இருக்­கும்­போது எவ்­வாறு நட்­பு­ற­வு­கொள்­ளுங்கள் எனக் கூற­மு­டியும்.


நாம்­ முன்­னெ­டுத்த நட­வ­டிக்­கைகள் ஊடாக இன்று சிங்­கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்­தியில் நல்­லி­ணக்கம் ஏற்­பட்­டுள்­ளது. ஆனால் கட்­சி­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்கம் காணப்­ப­ட­வில்லை. குறிப்­பாக கூறு­வ­தானால் தமிழ் அர­சியல் கட்­சி­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்கம் காணப்­ப­ட­வில்லை.


தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இரண்­டாகி விக்­கி­னேஸ்­வரன் வேறாக அமைப்பை உரு­வாக்­கி­யுள்ளார். சம்­பந்­த­னும் குழு­வி­னரும் வேறாக உள்­ளனர். டக்ளஸ் தேவா­னந்தா வேறாக உள்ளார். நாட்டில் நல்­லி­ணக்கம் ஏற்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாயின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு வேண்­டு­மெனக் கோரும் தமிழ் கட்­சி­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்கம் ஏற்­ப­ட­வேண்டும். ஒன்­று­பட்ட நிலைப்­பாட்­டுக்கு அவை வர­வேண்டும்.

Post a Comment