Ads (728x90)




-ARA.Fareel + Vi-


தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வா­ச­லுக்கு ‘சிங்­ஹ லே’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப் பட்­டி­ருந்த ஜீப் வண்­டியில் சென்ற இரு பௌத்த பிக்குகளும், இரு இளை­ஞர்­களும் பள்­ளி­வா­சலை புகைப்­படம் எடுத்துக் கொண்­ட­துடன் அயல் வீட்­டார்­க­ளிடம் பள்­ளி­வாசல் அப்­பு­றப்­ப­டுத்­தா­மைக்கான காரணத்தை வின­வி­யுள்­ளனர்.


ஜீப் வண்­டியின் முன்னால் ஒட்­டப்­பட்­டி­ருந்த ‘சிங்­ஹலே’ ஸ்டிக்கர் பள்­ளி­வா­சலில் பொருத்­தப்­பட்­டி­ருந்த சீ.சீ.ரி.வி. கம­ராவில் பதி­வு­றாத வகையில் ஜீப் வண்டி பின் நோக்­கியே செலுத்­தப்­பட்­டுள்­ளது. இச் சம்­பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை காலை நிகழ்ந்­துள்­ளது.


இச்­சம்­பவம் தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வாகம் தம்­புள்ளை பொலிஸ் நிலை­யத்­துக்கு உட­ன­டி­யாக அறி­வித்­த­தை­ய­டுத்து பொலிஸார் தம்­புள்ளை பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி சம­ரகோன் தலை­மையில் உடன் சென்­றி­ருக்­கி­றார்கள். என்­றாலும் பொலிஸார் ஸ்தலத்­துக்கு விஜயம் செய்­வ­தற்கு முன்பே குறிப்­பிட்ட ஜீப் வண்டி அவ்­வி­டத்­தி­லி­ருந்து அகன்று விட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.


ஜீப்­வண்­டியில் வருகை தந்த பௌத்த குரு­மார்­களும், இளை­ஞர்­களும் பக்­கத்தில் குடி­யி­ருப்­ப­வர்­க­ளிடம் ஏன் இந்தப் பள்­ளி­வாசல் இவ்­வி­டத்­தி­லி­ருந்து அகற்­றப்­ப­டா­ம­லிக்­கி­றது என்று வின­வி­யி­ருக்­கி­றார்கள். பள்­ளி­வாசல் அகற்­றப்­பட வேண்­டு­மெ­னவும் தெரி­வித்­தி­ருக்­கின்­றார்கள். இது பற்றி தம்­புள்ளை பொலிஸில் நாம் முறைப்­பாடு செய்­தி­ருக்­கிறோம் என பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் எஸ்.வை.எம்.சலீம்தீன் தெரி­வித்தார்.


தம்­புள்ளை பள்­ளி­வாசல் தம்­புள்ளை கடும்­போக்கு குழு­வி­னரால் கடந்த 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 20 ஆம் திக­தி­யன்று தாக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.


தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வாசல் ரங்­கிரி – ரஜ­ம­கா­வி­கா­ரைக்குச் சொந்­த­மான புனித பூமியில் சட்­ட­வி­ரோ­த­மாக அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவ்­வி­டத்­தி­லி­ருந்து பள்­ளி­வாசல் அகற்­றப்­பட வேண்­டு­மெ­னவும் தொடர்ச்­சி­யாகக் கோரிக்கை விடுக்­கப்­பட்டு வரு­வது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.


தம்­புள்­ளையில் பள்­ளி­வா­சலைச் சூழ­வுள்ள பல வர்த்­தக நிலை­யங்கள் வீடுகள் ஏற்­க­னவே அப்­புறப் படுத்­தப்­பட்­டுள்­ள­துடன் சில வீடுகள் அப்­பு­றப்­ப­டுத்­தப்­ப­டா­துள்­ளது.


அத்­துடன், பள்­ளி­வாசல் நிர்­வாகம் பொல்­வத்தை பகு­தியில் காணி வழங்­கப்­பட்டால் அவ்­வி­டத்­தி­லி­ருந்து பள்­ளி­வா­சலை அகற்றிக் கொள்ள விருப்பம் தெரி­வித்­துள்­ள­மையும் குறிப்­பி­டத்­தக்­கது. தம்­புள்ளை பொலிஸார் சம்­பவம் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்கொண்டுள்ளனர்.
Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment